சிறந்த பணிக்கான அண்ணா பதக்கம் பெற்ற மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 23.08.2024 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் காவல்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக அண்ணா பதக்கம் பெற்ற மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள். மதுரை திலகர்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி, மதுரை தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர். திரு. கனேஷ்ராம் அவர்கள், ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டி அண்ணா பதக்கம் […]
Author: policeenews
மதுரை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அண்ணா பதக்கம் முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்
மதுரை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அண்ணா பதக்கம் முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார் தமிழ்நாடு காவல்தூறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சிறந்த முறையில் பணியாற்றியகாவல்துறையினர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உயரிய விருதுகளான இந்திய குடியரசு தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம் […]
முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சாலை விதிகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் துறையினர் மர கன்று பரிசு
முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சாலை விதிகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் துறையினர் மர கன்று பரிசு 27.07.24 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு.. மதுரை இரயில்வே சந்திப்பு நுழைவு வாயிலில் காவல்துறை மற்றும் அப்துல் கலாம் முதலுதவி நல அறக்கட்டளை இணைந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் […]
மதுரைக்கு காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.
மதுரைக்கு காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம். ராமநாதபுரத்தில் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் A.தங்கமணி அவர்கள் மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுபேற்றார். மதுரை மாநகர் போலீஸ் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் கவுசல்யா அவர்கள் சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு (எஸ்.ஐ.சி., ) இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கு பணிபுரிந்த மகேஸ்குமார் அவர்கள் விளக்குதூண் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
9 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
9 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு தமிழகத்தில் 9 போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டகூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை மாவட்டம் மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரீத்தி, ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன், மேலூர் துணை […]
பைக்கில் வீலிங் – சமூக சேவை செய்ய நிபந்தனை ஜாமீன் – நிறைவேற்றிய வாலிபர்
பைக்கில் வீலிங் – சமூக சேவை செய்ய நிபந்தனை ஜாமீன் – நிறைவேற்றிய வாலிபர் திருச்சி மாவட்டம் புலிவலத்தைச் சேர்ந்த வர் நிவாஸ் (19). இவர் கடந்த (23.5.2024) திருச்சியில் நடை பெற்ற பேரரசர் பெரும்பிடு முத்தரையர் சதய விழாவில் பங்கேற்க சென்றார். அதற்காக இருசக்கர வாகனத்தின் தோற்றத்தை மாற்றி அதில் படுத்தவாறும், வீலிங் செய்த வாறும், பொதுமக்களுக்கு அச்சம் தரும் வகையில் ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமான வீடியோ சமூக வலை […]
மதுரை மத்திய சிறை மற்றும் ராமநாதபுரம் சிறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மதுரை மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சிறைத் துறையில் வேலைவாய்ப்பு மதுரை மத்திய சிறை மற்றும் ராமநாதபுரம் சிறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மதுரை மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் காலியாக உள்ள 1 நெசவு ஆசிரியர்,1கொதிகலன் உதவியானர் ஆகிய இரண்டு மாணவர்களுக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பெண்கள் சிறையில் காலியாக உள்ள பரமக்குடி பெண்கள் சிறையில் காலியாக உள்ள 1 தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிறைத்துறை நிர்வாகம் […]
மதுரை மாநகரில் உயிரிழந்த போக்குவரத்து காவலருக்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிவாரணத்தொகை வழங்கிய காவல் ஆணையர்
மதுரை மாநகரில் உயிரிழந்த போக்குவரத்து காவலருக்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிவாரணத்தொகை வழங்கிய காவல் ஆணையர் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த முதல் நிலை காவலர் 4001திரு.சங்கர பாண்டியன் அவர்கள்கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்புகையில் தெப்பக்குளத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காவலரின் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள்( Tamil Nadu Police 2011 batch) மூலம் திரட்டப்பட்ட நிவாரண உதவி தொகைரூபாய் 25,86,750 க்கான […]
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,00,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துரையினர்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,00,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துரையினர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.07.2022 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த முருகன் (57) பசுபதி (43) ஆகிய இருவரையும் NDPS வழக்கில் கைது செய்து செக்கானூரணி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி […]
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (17.07.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 14 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்