
மாணவி கூட்டு பலாத்காரம் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள்
கோவையைச் சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 2019-ல் 11ம்வகுப்பு படித்து வந்தார். அதே ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இரவு அங்குள்ள பூங்காவில் காதலருடன் மாணவி பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த கும்பல் தங்களை போலீசார் எனக் கூறி மிரட்டி காதலனை சரமாரியாக தாக்கினர். மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் பின்னர் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல் வயது 21 பிரகாஷ் வயது 22 கார்த்திகேயன் வயது 28 நாராயண மூர்த்தி வயது 30 பப்ஸ் கார்த்தி வயது 27 மணிகண்டன் வயது 32 வடவள்ளி தில்லைநகரைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டன் வயது 29 ஆகிய 7 பேரை கைது செய்தனர் இந்த வழக்கு விசாரணை கோவை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து மணிகண்டன் கார்த்தி (எ) பப்ஸ் கார்த்திக் மணிகண்டன் என்ற ஆட்டோ மணிகண்டன் ஆகிய 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 50,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் ராகுல் பிரகாஷ் நாராயணமூர்த்தி கார்த்திகேயன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
