Police Recruitment

காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க உறவினரை கொன்று எரித்த இளம்பெண்: உடந்தையாக இருந்த 17 வயது மகன்

காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க உறவினரை கொன்று எரித்த இளம்பெண்: உடந்தையாக இருந்த 17 வயது மகன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த புங்கம்பாடி பாரவலசு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (72). விவசாயி. இவரது முதல் மனைவி சாமியாத்தாள்.

குழந்தைகள் இல்லாததால் அவரை பிரிந்து, கடந்த 25 ஆண்டுக்கு முன் மரகதம் என்பவரை பழனிச்சாமி 2வது திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 20ம் தேதி காலை பழனிசாமிக்கு வழக்கம் போல், அவரது மனைவி மரகதம் காபி கொண்டு வந்தார். அப்போது, பழனிசாமி கருகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், பழனிசாமியை 5க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி கொலை செய்து, அதன்பின் தீ வைத்து எரித்து இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் பழனிசாமி மனைவியின் சகோதரனான ஈரோடு முருங்ககாட்டு வலசை சேர்ந்த தங்கமணி மனைவி மாசிலாமணியிடம் (35) விசாரணை நடத்தினர்.

இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தங்கமணியுடன் நூல் மில்லில் வேலை பார்த்து வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தமிழன் (36) என்பவர் மாசிலாமணியின் வீட்டிற்கு அருகே வீடு வாடகைக்கு எடுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.அப்போது மாசிலாமணிக்கும், தமிழனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாசிலாமணி தனது மகளுக்காக வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் பணத்தை தமிழன் வாங்கியிருந்த கடனை அடைக்க கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் மாசிலாமணி மகள் பருவ வயதை அடைந்ததையடுத்து, பூப்புனித நீராட்டு விழா நடத்த தங்கமணி ஆயத்தமானார்.

இதனால், மாசிலாமணி கள்ளக்காதலனிடம் கடனாக கொடுத்த நகை, பணத்தை கேட்டுள்ளார்.அவர் தர நீண்ட நாள் ஆகும் என்பதால், உறவினர் யாராவது இறந்தால் தான் விழாவை தள்ளிப் போட முடியும் என திட்டம் தீட்டி தங்கமணியின் சகோதரியின் கணவரான பழனிச்சாமியை கொலை செய்ய மாசிலாமணி, கள்ளக்காதலன் தமிழன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து கடந்த 19ம் தேதி இரவு பெருந்துறை பாரவலசில் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பழனிசாமியை வெட்டி கொலை செய்து, உடலை தீயிட்டு எரித்துள்ளனர்.

பின்னர், எதுவும் தெரியாதது போல் நாடகமாடினர். கொலைக்கு உடந்தையாக மாசிலாமணியின் 17 வயது மகனும் இருந்துள்ளார்.

ஆகையால் மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.