ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கான எச்சரிக்கை ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை இல்லை எனவும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகிறதா என்பதை அந்தந்த பகுதிகளில் காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும், கஞ்சா விறப்பனை செய்து அதில் சொத்துக்கள் வாங்கி இருந்தால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும், பொது இடங்களில் மது அருந்துவது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோபிசெட்டிபாளையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் ஐபிஎஸ் பேட்டியளித்தார்…!
Month: June 2024
இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது கடந்த 19.05.24-ந் தேதி, காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர் ரோடு தாராநல்லூர் பூக்கொல்லை தெருவில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் ஒருவர் தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை என புகார் பெறப்பட்டது. இந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், ஜெயில்பேட்டையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான […]
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.42 லட்சம் மோசடி-ஆன்லைனில் சூதாட்டம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.42 லட்சம் மோசடி-ஆன்லைனில் சூதாட்டம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக மதுரை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே தனது மனைவி […]
ஆட்டோ ஓட்டிய போது தலைக்கவசம் அணியவில்லை என அபராதம்: எஸ்.பி.யிடம் புகாா்
ஆட்டோ ஓட்டிய போது தலைக்கவசம் அணியவில்லை என அபராதம்: எஸ்.பி.யிடம் புகாா் ஆட்டோ ஓட்டியபோது தலைக்கவசம் அணியவில்லை என போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்ததாக திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜானிடம் ஓட்டுநா் புகாரளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் 51 மனுக்களை எஸ்.பி.யிடம் அளித்தனா். மேலும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க […]
கோவையில் போக்குவரத்து மாற்றம்; போலீசார் அறிவிப்பு!
கோவையில் போக்குவரத்து மாற்றம்; போலீசார் அறிவிப்பு! கோவையில் அவினாசி ரோடு மேம்பாலப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது:-அண்ணா சிலையிலிருந்து அவினாசி ரோடு செல்லக்கூடிய வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பிலிருந்து வலதுபுறமாக திரும்பி புலியகுளம் வழியாக இராமநாதபுரம் சந்திப்பில் இடது புறமாக திரும்பி திருச்சி ரோடு வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம். அவினாசி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் பயனியர் மில் வழியாக இடது புறமாக திரும்பி இரயில்வே மேம்பாலம் வழியாக காந்தி மாநகர் சென்று […]
காரை நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிய திருச்சி சப்-இன்ஸ்பெக்டரின் ஐந்து பவுன் சங்கிலி திருட்டு
காரை நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிய திருச்சி சப்-இன்ஸ்பெக்டரின் ஐந்து பவுன் சங்கிலி திருட்டு திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ் வயது 54, இவர் கடந்த 24ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தனது நண்பர்கள் குறிஞ்சி செல்வம் சதீஷ்குமார் ஆகியவுடன் காரில்திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார் ப்போது கருடபெட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே படுத்து மூவரும் அயர்ந்து […]
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு 26.06.2024 ம் தேதியன்று பகல் 13.00 மணிக்குதிருவான்மியூர் இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்டசிந்தாதிரிப்பேட்டைபகுதி ,மற்றும் மின்சார இரயிலில் பயணம் செய்யும் இரயில் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும்போதை ஒழிப்பு சம்பந்தமாகIRP Egmore , IPF Beach, IPF/MylaporeGRP திருவான்மையூர் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள்,RPF ஊழியர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு செய்தனர்
சென்னையில் திருடுபோன வாகனங்களைக் கண்டுபிடிக்க புதிய உக்தி!
சென்னையில் திருடுபோன வாகனங்களைக் கண்டுபிடிக்க புதிய உக்தி! வாகன திருட்டைக் கண்டுபிடிக்க சென்னை காவல்துறைக்கு புதிய உக்தி ஒன்று கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.ஒருங்கிணைக்கப்பட்ட வாகன கண்காணிப்பு அமைப்பு மூலம், காணாமல் போன வாகனத்தின் பதிவு எண்ணை தரவுகளில் சேர்த்துவிட்டால், தொடர்ந்து சென்னையில் 28 பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம், அந்த வாகனம் எந்த இடத்தில் கடந்து சென்றாலும் உடனடியாக காவல்துறை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தானாகவே தகவல் சென்றுவிடும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த […]
மதுரை மாநகரில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு 2022-2023க்கான சிறப்பு கல்வி உதவித்தொகையை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்.
மதுரை மாநகரில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு 2022-2023க்கான சிறப்பு கல்வி உதவித்தொகையை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார். 22.06.2024 அன்று மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் குழந்தைகள் 134 பேருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்களால் 2022-2023 ஆண்டிற்கு தமிழ்நாடு காவலர் நிதியிலிருந்து […]
சாலை போக்குவரத்து பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சாலை போக்குவரத்து பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திருபி. தங்கத்துரை அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,ஓசூர் நகர துணை கண்காணிப்பாளர் திரு.பாபு பிரசாந்த் அவர்கள் மேற்பார்வையில் இன்றுஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து எடுத்து ரைக்கப்பட்டது.இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்திருமதி. பத்மாவதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்இதில் தலைமை போக்குவரத்து பாதுகாவலர் திரு.முத்துச்சாமி அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அவருடன் போக்குவரத்து பாதுகாவலர் மணி […]