Police Department News

திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் நடந்தது.

திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் நடந்தது.

திருட்டுப்போன ரூபாய் 1.55 கோடி மதிப்புள்ள 1382 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் செல்போன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து செல்போன்களை மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு .மகேஷ்குமார் அகர்வால் இ .கா .பா அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் காவல் கூடுதல் ஆணையாளர்கள் மருத்துவர் என் .கண்ணன் இ.கா.ப தெற்கு திரு .டி. செந்தில்குமார்இ.கா.ப. வடக்கு அவர்கள் மேற்பார்வையில் நான்கு மண்டல இணை ஆணையாளர் அறிவுரையின் பேரில் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் 12 காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் காவல் குழுவினர் ஒருங்கிணைந்த தனிப்படை அமைக்கப்பட்டது .காவல் குழுவினர் 12 காவல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு குழுவினருடன் இணைந்து அவர்களது காவல் மாவட்டங்களில் உள்ள காணாமல் மற்றும் திருட்டுப்போன செல்போன்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டும் செல்போன்களின் சர்வதேச செல்போன் கருவி அடையாள(IMEI) குறியீட்டு எண்களை கொண்டும் செல்போன் நிறுவனங்களின் உதவி கொண்டு ,மேற்படி காணாமல் மற்றும் திருடுபோன செல்போன்களை தற்போது பயன்படுத்தி வரும் நபர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து அவர்களிடமிருந்து செல்போன்கள் மீட்கப் பட்டு வருகின்றது .

Leave a Reply

Your email address will not be published.