மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தரிசனத்திற்கு வந்தவர்கள் தவறவிட்ட நகைகளை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய பெண் சிறப்பு சார்பு ஆவாளர்களை பாராட்டிய காவல் ஆணையர். 05.02.2026 அன்று சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரது மனைவி ரேவதி, வயது 39/2026 என்பவர் தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த போது சுமார் 1. 1/2 பவுன் மதிப்புள்ள இரண்டு ஜோடி தங்கதோடுகள் மற்றும் மூன்று தங்க காயின்கள் அடங்கிய மணி […]
Month: February 2026
பிங்க் பெட்ரோல்களை இயக்க 7 பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்ப்பட்டது
பிங்க் பெட்ரோல்களை இயக்க 7 பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்ப்பட்டது 19.02.2026 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட பிங்க் பெட்ரோல்களை இயக்குவதற்காக புதிதாக 7 பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான ஓட்டுனர் உரிமங்களை காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்கள். மேலும் மதுரை மாநகரத்தில் […]
தமிழக அளவில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் மூன்றாம் இடம்பெற்றுள்ளது-கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.
தமிழக அளவில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் மூன்றாம் இடம்பெற்றுள்ளது-கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் காவல் நிலையம், தமிழக அளவில் சிறப்பான சேவைக்காக மூன்றாவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்படி காவல் நிலையம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொண்ட விரைவான விசாரணைகள், மனநல ஆலோசனை சேவைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொதுமக்கள் […]
அடியாட்கள் வைத்து கடன் வசூல் செய்யும் நிதி நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அடியாட்கள் வைத்து கடன் வசூல் செய்யும் நிதி நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் சட்டப்படியான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். நிறுவனங்கள் கடனை வசூல் செய்யும் பைனான்ஸ், சிறு வங்கிகள் அடியாட்கள் வைத்து கடன் வசூல் செய்யும் போது கடன் வாங்கியவர்களின் வீட்டிற்கு சென்று மிரட்டுவது, ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்க தமிழக அரசு 2025ல் சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் கீழ் முதன்முதலில் விழுப்புரம் மாவட்டத்தில் F […]
மதுரையில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி
மதுரையில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி மதுரை மாநகரில் தல்லாகுளத்தில் பெண் காவலர்கள் தங்கும் விடுதியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) காவல் ஆதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
55 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் கூடிய புதிய தாம்பரம் மாநகர காவல் ஆணையரகக் கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்
55 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் கூடிய புதிய தாம்பரம் மாநகர காவல் ஆணையரகக் கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார் தாம்பரம் மாநகர காவல் துறைக்கென புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளைத் தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார் . சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் புதிய காவல் ஆணையரகக் கட்டிடம் அமையவுள்ளது. சுமார் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் 8 […]
நீதித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்
நீதித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 10.2.2026 அன்று மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி, மதுரை தலைமை நீதித்துறை நீதிபதி, மதுரை நகர காவல் ஆணையர் ஆகியோர் முன்னிலையில் நீதித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை இணைந்து செயல்படுவது குறித்தும், நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்துவது குறித்தும், வழக்கின் சாட்சிகளை விரைவில் ஆஜர் படுத்துதல், வழக்குக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பது, பாதிக்கப்பட்டவருக்கு விரைவாக நீதிபெற்று […]
தமிழ்நாடு சிறப்பு காவல் படைஆறாம் அணியினருக்குசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தமிழ்நாடு சிறப்பு காவல் படைஆறாம் அணியினருக்குசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 11.2.26 புதன் கிழமையன்று, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக, சாலை பாதுகாப்புகள் குறித்து மூன்று நாட்கள் சிறப்பு செய்முறை வகுப்புகள் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாம் அணியின் கமாண்டென்ட் மதுக்குமாரி I P S அவர்களது உத்தரவின் படி துணை கமாண்டென்ட் தாமஸ் அவர்களது மேற்பார்வையில் உதவி கமாண்டென்ட் மான் சிங் அவர்களது […]
மதுரையில் நகைப் பறிப்பு, குற்றங்களை தடுக்க, மதுரை சுப்ரமணியபுரம் C 2 காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சோபியா அவர்கள் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளார்.
மதுரையில் நகைப் பறிப்பு, குற்றங்களை தடுக்க, மதுரை சுப்ரமணியபுரம் C 2 காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சோபியா அவர்கள் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளார். சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் கிரேசி சோபியா அவர்கள் சமீபத்தில் பொறுப்பேற்றார். காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வார்டுகளிலுள்ள பெண்கள், பொதுமக்கள் இணைத்து வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றை ஏற்படுத்தி, அதில் வெளியிட்ட ஆடியோ ஒன்றில், ‘ஒரு பவுன் ரூ. 1 லட்சத்தை தாண்டியிருக்கிறது. பாதுகாப்பின்றி நகை […]
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு 09.02.2026 அன்று மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.










