Police Recruitment

மதுரை கீழமாசி வீதியில் வேலைக்கு சென்ற பெண் மாயம், விளக்குத்தூண் போலீசார் விசாரணை

மதுரை கீழமாசி வீதியில் வேலைக்கு சென்ற பெண் மாயம், விளக்குத்தூண் போலீசார் விசாரணை

மதுரை மாநகர் விளக்குத்தூண் B1, காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியான மதுரை கீழமாசிவீதி, மேலநாப்பாளையம் குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பாண்டியன் மகன் கண்ணன் வயது 60/21, இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இரண்டாவது மகள் முத்தரசிக்கு கடந்த 2018 ம் ஆண்டு திருப்புவனம் பாண்டி என்பவருக்கு திருமணம் முடிந்து கொடுக்கப்பட்டது. முத்தரசி குடும்பப்பிரச்சனை காரணமாக தனது தந்தை வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 26 ம் தேதி வீட்டை விட்டு வேலைக்கு சென்றவர் திரும்ப அவர் வரவில்லை எனவே இவரது தந்தை கண்ணன் அவர்கள் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் தன் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் மனு கொடுத்துள்ளார் புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு லிங்கப்பாண்டியன் அவர்களின் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.