Police Recruitment

மதுரை, மேலூர் அருகே வாகன விபத்தில் ஒருவர் மரணம் போலீசார் விசாரணை

மதுரை, மேலூர் அருகே வாகன விபத்தில் ஒருவர் மரணம் போலீசார் விசாரணை

மேலூர் அருகே உறங்கான்பட்டி, புதுபட்டியை சேர்ந்த பெரிய கருப்பன் மகன் முனிச்சாமி வயது 21/21, இவர் உறங்கான்பட்டியிலிருந்து ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான உ.புதுபட்டிக்கு வந்து கொண்டிருக்கும் போது கொட்டான்பட்டி அருகே
ரோட்டில் 407 வேன் வைக்கோல் ஏற்றிய நிலையில் நிறுத்த கூடாத இடத்தில் வேனை நிறுத்தி அதன் ஓட்டுனர் வைக்கோல் வியாபாரம் செய்து வந்தார். பின்னால் சென்ற இறந்த முனிச்சாமி என்பவர் 407 வேனில் பின்புறத்தில் மோதியதில் தலை மற்றும் உடம்பில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் இறந்த முனிச்சாமியின் உடலை கைபற்றி மேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தும் மேற்படி நிறுத்த கூடாத இடத்தில் நிறுத்தியிருந்த 407 வேன் ஓட்டுனரை தேடியும் வருகிறார்.மேல் விசாரணைக்காக இறந்த முனிச்சாமியின் அம்மா காளியம்மாள் அவரிடம் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்கள் புகார் மனு பெற்று வழக்கு பதிவு செய்து மேற்படி 407 வேனின் ஓட்டுனரை தேடி வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.