Police Recruitment

போலி சான்றிதழ் வழங்கிய இரண்டு வக்கீல்கள் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கல்லூரணியை சேர்ந்த கலையரசன் இவரது நிலத்தின் அடமான பத்திரம் தொலைந்து போனதாக புகார் கொடுக்க இளையான்குடி காவல் நிலையத்திற்கு சென்றபோது காவல் நிலைய வாசலில் அவரை சந்தித்த 2 வக்கீல்களான, கலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலையா மற்றும் பாத்திமா நகரைச் சேர்ந்த பாண்டியன் இருவரும் சேர்ந்து எங்களிடம் ரூ.10000/- கொடுத்தால் புதுபத்திரம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். இதை நம்பிய கலையரசன்ரூ10000/- கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த புதுபத்திரத்தை சார்பதிவாளரிடம் காண்பித்தபோது போலி பத்திரம் என தெரிய வரவே இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வக்கீல்கள் 2 பேரையும் u/s 420,465,468,469,471,473 IPCன் கீழ் இளையான்குடி போலீசார் 12.11.19 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.