Police Department News

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளையார்குளம்,நடுத் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் வயது 48 என்பவர் 23.08.2021 அன்று தனது இருசக்கர வாகனத்தை அவரது தோட்டத்திற்கு வெளியே நிறுத்தியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் சுப்ரமணியனின் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வதை கண்டு, சுப்பிரமணியனும் அவரது நண்பர் சுப்பையாவும் விரட்டிச் சென்று திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை திருடி நபர் நாசரேத், மணி நகரைச் சேர்ந்த இருதயராஜ் என்ற பூச்சி வயது 46, என்பது தெரியவந்தது. மேற்படி சுப்ரமணியன் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு.மாரியப்பன் அவர்கள் விசாரணை மேற்கொண்டு பைக் திருட்டில் ஈடுபட்ட எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.