Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் மூதாட்டி மாயம், மருமகள் போலீசில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை, செல்லூர் பகுதியில் மூதாட்டி மாயம், மருமகள் போலீசில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை டவுன், செல்லூர், பசுமடம் கிழக்கு சந்தில் குடியிருந்து வருபவர் வேல்முருகன் மனைவி திருமதி. லீலாவதி வயது 50/21, இவரது கணவர் வேல்முருகன் கோவில், பூசாரியாக வேலை பார்த்து தற்போது ஓய்வில் உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருடன் உடன் பிறந்த ஒரு சகோதரி, ஒரு சகோதரர் மதுரை ஆனையூரில் வசித்து வருகின்றனர். இவரின் தந்தையின் மறைவிற்கு பிறகு தனது தாயார் குருவம்மாள் வயது 78/21, அவர்களை தனது பராமரிப்பில் வைத்திருந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 28 ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் இவரது வீட்டிலிருந்து எங்கோ சென்று விட்டார். அவர் வழக்கமாக செல்லும் இடங்களில் எல்லாம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை எனவே இவரது மருமகள் லீலாவதி தன் மகனுடன் செர்ந்து வந்து செல்லூர்D2, காவல் நிலையத்தில் தனது மாமியாரை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார், புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு ஜான் அவர்கள் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மூதாட்டியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.