Police Department News

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் ரேசன் அரிசி கடத்திய முதியவர் கைது

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் ரேசன் அரிசி கடத்திய முதியவர் கைது

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு. பரணிதரன் அவர்கள் பணியில் இருந்த சமயம் அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அதாவது அரியமங்கலம் தொழிற்பேட்டையில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்படி சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் திரு. பரணிதரன் அவர்கள் மற்றும் நிலைய எஸ்.எஸ்.ஐ., ஸ்டாலின் மற்றும் காவலர்களுடன் சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரித்த போது அவர் காந்தி மார்கெட் தாராநல்லூரை சேர்ந்த முகமது அலி ஜின்னா அல் அமீன் என்பது தெரிய வந்தது. அவர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசியை தொழில் பேட்டையில் ஒரு சிறிய அறையில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அரிசி மூடைகள் மீட்கப்பட்டது, அதன்பின் அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.