Police Department News

மதுரை மாவட்டம் மேலூர் அருகே டிரைவரை தாக்கிய 5 நபர்கள் கைது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே டிரைவரை தாக்கிய 5 நபர்கள் கைது

கடந்த 26.11.2021 தேதி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் குமார் என்பவர் தான் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும், ஒன் வே ஆப் (One Way App) என்ற செயலி மூலம் சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு பயணியை ஏற்றி வந்து ராமநாதபுரத்தில் இறக்கிவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றுவதற்காக மதுரையில் ஏ டூ பி (A 2 B) ஓட்டல் அருகே காத்திருந்ததாகவும் அப்போது அங்கு வந்த மதுரையைச் சேர்ந்த மற்ற செயலியை பயன்படுத்தி வாகனம் ஓட்டி வரும் ஓட்டுனர்கள் தன்னை அசிங்கமாக பேசி எப்படி நீங்க வந்து ஆட்களை ஏற்றலாம் என்று கூறி தாக்கியதாகவும் தன்னிடத்தில் இருந்த ரூபாய் 3700 எடுத்துச் சென்றதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணையில் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளான 1. கார்த்திக் ராஜா 24 த/பெ. வீரணன், நெடுங்குளம், விராதனூர், மதுரை. 2. கார்த்திக் 23 த.பெ. கண்ணன், நரிமேடு, மதுரை. 3. கார்த்திக் 31 த.பெ. கண்ணன், சொக்கலிங்க நகர், மதுரை 4. அவினாஷ் 24 த.பெ. பால்பாண்டி, செல்லூர், மதுரை 5. சதீஷ்குமார் 29 த.பெ. பொன்ராஜ், ஆண்டார் கொட்டாரம், மதுரை ஆகிய நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். சம்பவத்தின் போது எதிரிகள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.