Police Department News

மதுரையில் முன் விரோத்தின் காரணமாக ரவுடி கொலை!!

மதுரையில் முன் விரோத்தின் காரணமாக ரவுடி கொலை!!

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே, ரவுடி ஜெபமணி கொலைசெய்யப்பட்டார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள, C1 திடீர் நகர் காவல் நிலையத்திற்க்கு உள்ளபட்ட மேலவாசல் பகுதியில் குடியிருந்து வரும் ,ஜெபமணி வயது 26/2022 இவர் மீது23வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் முன் விரோதத்தில் அவரை 14/07/2022 அன்று இரவு 9.30 மணி அளவில் மது குடித்துக் கொண்டு இருந்த போது, அங்கு வந்த இரு சக்கரவாகனத்தில் சிலர் ஜெபமணியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த, C-1
திடீர் நகர் காவல் துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு உடற் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலு‌ம் இதையடுத்து C-1 திடீர் நகர் காவல் நிலைய, சட்டம் & ஒழுங்கு ஆய்வாளர், திரு. சுரேஷ் அவர்கள், வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி சென்ற குற்றாவளிகளை காவல் துறையுனர் தேடி வருகிறார்கள்.
விசாரணையில் ஜெபமணி மேல் மதுரை மாநகரில் உள்ள பல் வேறு காவல் நிலையங்களில் 23 க்கும் மேற்பட்ட கொலைவழக்குகள் உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.