Police Department News

விஞ்ஞான வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதும் அதில் செல்போன் பயன்பாடும் தேவையும் ஒன்றுதான்.

விருதுநகர் மாவட்டம்:-

விஞ்ஞான வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதும் அதில் செல்போன் பயன்பாடும் தேவையும் ஒன்றுதான்.

எந்த சூழ்நிலையிலும்,எந்த நேரத்திலும் பொது இடத்தில் பிரச்சினை மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள்,வேலைக்கு செல்லும் பெண்களுக்கான இடங்களில் ரகளை,கேலி,கிண்டல், என இன்னல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இம்மாதிரியான இன்னல்கள் ஏற்படும் நேரங்களில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன்கள் பெரிதும் பயன்படும் வகையில் தமிழ காவல் துறையில் காவலன் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டு பயன்படும் வகையில் பாலவநத்தம் உயர்நிலை பள்ளி, காரியாபட்டியில் பொது மக்கள் கூடும் இடத்திலும் காவலன் செயலியை பற்றி சார்பு ஆய்வாளர்கள் எடுத்துக்கூறினர்.

மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற வகையில் காவல் சார்பு ஆய்வாளர்கள்,காவல் ஆளிநர்கள் என நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வாழ்க்கை எங்கேயும் எப்போதும் பாதுகாப்பானதுதான் அத்துடன் நேரத்தையும், பயணத்தையும் இனிதே பயணிக்க வேண்டுமெனில் காவலன் உதவி செயலி இன்றியமையாததாகும் என்பதை விளக்கும் விதமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published.