Police Department News

கஞ்சா போதை; பாலியல் வழக்கில் சிக்கிய அப்பா, மகன் – 19 வயது மகளுக்குத் தந்தையால் நடந்த கொடூரம்!

கஞ்சா போதை; பாலியல் வழக்கில் சிக்கிய அப்பா, மகன் – 19 வயது மகளுக்குத் தந்தையால் நடந்த கொடூரம்!
சென்னையில் 19 வயது மகளுக்குத் தந்தை, அவரின் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணின் அண்ணன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், என்னுடைய அம்மா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்குத் திருமணமாகித் தனியாகக் குடியிருந்துவருகிறேன். எனக்கு ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர். கடந்த 23-ம் தேதி தம்பி, வேலைக்குச் சென்றுவிட்டார். தங்கை மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது குடிபோதையில் வீட்டுக்கு வந்த என்னுடைய அப்பா லோகநாதன், தங்கையிடம் தவறாக நடந்துள்ளார். அப்போது என் அப்பாவின் நண்பர் அய்யாவு (43), அவரின் மகன் மணி (23) ஆகியோரால் என் தங்கைக்கு அந்தக் கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின்பேரில் போலீஸார் அந்த 19 வயதுப் பெண்ணிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அந்தப் பெண், தனக்கு நடந்த கொடுமைகளை விரிவாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்தப் பெண்ணின் தந்தை லோகநாதன், அவரின் நண்பர்கள் அய்யாவு, மணி ஆகியோரை போலீஸார் தேடிவந்தனர். இந்தநிலையில் ஓட்டேரி சுடுகாடு பகுதியில் மறைந்திருந்த மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது போதையில் தவறு செய்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,பெண்ணின் தந்தை லோகநாதன், ஆட்டோ டிரைவராக உள்ளார். மது, கஞ்சா போன்ற போதை பழக்கத்துக்கு அடிமையான லோகநாதன், வேலைக்குச் சரிவர செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்துள்ளார். லோகநாதனின் மகளான 19 வயதுப் பெண், 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பிறகு அவர் குடும்பத்தைக் கவனித்துவருகிறார்.
அம்மா இல்லாததால் அப்பாவையும் ஒரு சகோதரனையும் கவனித்து வந்த அந்தப் பெண் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துவந்துள்ளார். இந்தச் சமயத்தில் வீட்டிலேயே இருக்கும் லோகநாதன், போதையில் மகளிடம் தவறாக நடந்துள்ளார். இந்தத் தகவல் தெரிந்ததும் அப்பாவை பெண்ணின் சகோதரர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், லோகநாதன் திருந்தவில்லை. இந்தச் சமயத்தில்தான் கடந்த 23-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மகளை லோகநாதன், அவரின் கூட்டாளிகள் அய்யாவு, அவரின் மகன் மணி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கூட்டாகப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் மூன்று பேரைக் கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது” என்றனர்.
லோகநாதன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் மனைவி இறந்து 10 ஆண்டுகளுக்கும மேலாகிவிட்டது. இதனால் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டேன். என்னுடைய இரண்டாவது மகன் சம்பாதித்துதான் குடும்பத்தைக் கவனித்துவந்தான். போதை பழக்கத்தின் மூலம் பெயின்டராக வேலைபார்க்கும் அய்யாவும் அவரின் மகன் மணியும் எனக்கு அறிமுகமானார்கள். சம்பவத்தன்று காலையில் என் வீட்டிலேயே வைத்து 3 பேரும் கஞ்சா, மது அருந்தினோம். போதை தலைக்கேறியதும் என் மனம் மாறியது. என் மகளுக்கும் வலுக்கட்டாயமாக மது கொடுத்தோம். அதைக் குடித்ததும் அவள் போதையில் உளறினாள். அதன் பிறகு மூன்று பேரும் சேர்ந்து என் மகளிடம் தவறாக நடந்தோம். அப்போது என்னுடைய மூத்த மகன் வீட்டுக்கு வந்தான். அதைப்பார்த்ததும் நாங்கள் மூன்று பேரும் தப்பியோடிவிட்டோம். போதை தெளிந்த பிறகுதான் நான் செய்தது தவறு என்று தெரிந்தது" என்று கூறியுள்ளார். அய்யாவு, அவரின் மகன் மணியிடம் போலீஸார் விசாரித்தபோது,லோகநாதனின் மகளிடம் நாங்கள் தவறாக நடந்தபோது அதை அவர் தடுக்கவில்லை. போதையில் இருந்த எங்களுடன் லோகநாதனும் சேர்ந்துகொண்டார். ஆனால், லோகநாதனின் மகன் திடீரென வீட்டுக்கு வந்துவிட்டதால் சிக்கிக்கொண்டோம்” என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.