Police Department News

கல்லூரி பஸ் மோதி மாணவர் பலி

கல்லூரி பஸ் மோதி மாணவர் பலி

மதுரை சிக்கந்தர் சாவடி யை சேர்ந்தவர் பிரவீன், கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது பயஸ், ஆனைக்குளத்தை சேர்ந்தவர் சரவணன். நண்பர்களாக இவர்கள் 3 பேரும் மதுரை அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றதாக தெரிகிறது.

அழகர்கோவில் அருகே சென்ற போது அவர்கள் படிக்கும் கல்லூரி பஸ்சும் முன்னால் சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே ஒரு ஆட்டோ வந்தது. அதில் மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினர்.

அப்போது எதிர்பாராத விதமாக கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரவீன், முகமது பயஸ், சரவணன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தனிப்பிரிவு ஏட்டு மாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.