Police Department News

தலையில் கல்லை போட்டு ரவுடியை கொன்ற கூட்டாளி

தலையில் கல்லை போட்டு ரவுடியை கொன்ற கூட்டாளி

மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள அரசினர் மாணவர் விடுதி வளாகத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த நபர் தலையில் பாறாங்கல்லை போட்டு மர்மநபர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவரின் மகன் உதயகுமார் என்ற கொக்கி குமார் என்பது தெரியவந்தது. பிரபல ரவடியான இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொக்கி குமாரை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது போலீஸ் நிலை யங்களில் பல்வேறு வழக்கு கள் உள்ளன. இவரும், கொலையான கொக்கி குமாரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேசின் செல்போனை கொக்கி குமார் திருடி விட்டதாக தெரிகிறது. இதை அறிந்த விக்னேஷ் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று கொக்கி குமார் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் இருப்பதை அறிந்த விக்னேஷ் குடிபோதையில் அங்கு சென்று அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போதையில் இருந்த விக்னேஷ், கொக்கி குமாரை கீழே தள்ளி அருகில் இருந்த பாறாங்கல்லை தலையில் போட்டுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தி லேயே கொக்கி குமார் பரிதாபமாக இறந்தார்.

மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தலைமறை வாக உள்ள விக்னேஷ் போலீ சார் தேடி வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.