Police Department News

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள் கைது

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள் கைது

மதுரையில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த, அதில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார்

அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.அந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஜெய்ஹிந்த்புரம் முத்து பாலம் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்கள் யார்? என்று விசாரித்த போது மதுரை ஆண்டாள்புரம் பழைய மீனாட்சி காலனியை சேர்ந்த கலையரசன் என்பவரின் மகன் பிரவீன் (வயது22), சுந்தர்ராஜபுரம் வி.வி.கிரி சாலையை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் தமிழரசன் (21) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

அவர்கள் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, மிளகாய் பொடி, கயிறு உள்ளிட்டவைகளை வைத்திருந்தனர். அதுபற்றி விசாரித்த போது, அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதங்களுடன் அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பிரவீனும், தமிழரசனும் ரவுடிகள் ஆவர். பிரவீன் மீது கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், தமிழரசன் மீது கொள்ளை முயற்சி, தாக்குதல், ஆயுதங்களுடன் திரிந்தது உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவர்களுடன் சிக்கிய சிறுவன் மீது வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு மட்டும் இருக்கிறது.

தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.