Police Department News

சித்திரை திருவிழா: பக்தர்கள் பாதுகாப்புடன் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-அமைச்சர்கள்

சித்திரை திருவிழா: பக்தர்கள் பாதுகாப்புடன் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-அமைச்சர்கள்

மதுரை சித்திரை பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் பி.மூர்த்தி , பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் அனீஷ் சேகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பேசும்போது கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தின் அடை யாளங்களில் ஒன்றான சித்திரை பெரு விழா மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா வில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி நடக்கிறது. தேரோட்டம் 3-ந்தேதி நடக்கிறது. கள்ளழகர் திருக்கோலத்தில் எதிர் சேவை 4-ந்தேதி நடக்கிறது. வைகை ஆற்றில் எழுந்த ருளல் 5-ந்தேதி நடக்கிறது.

கடந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்த ருளல் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலின் காரணமாக உயிரிழப்பு போன்ற வருந்தத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. இத்தகைய சம்பவங்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். அதற்கேற்றாற்போல் பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையை அதிக ரித்து வாகன நிறுத்தம், மக்கள் கூட்டம் ஆகிய வற்றை முறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதிய சி.சி.டி.வி காமிராக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை செய்திட வேண்டும்.

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி யில் பங்கேற்பதற்கு வழங்கப்படும் அனுமதி அட்டையை முறையே பரிசோதித்து அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது.

மேலும் தேரோட்டத் தின்போது தேரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பொதுப்பணித் துறையின் சான்றிதழ் பெற்றிட வேண்டும். தேர் செல்லும் வழி, கள்ளழகர் ஊர்வலம் வரும் வழிகளை முறையே கண்காணித்து தாழ்வான நிலையில் மின் விநியோக கம்பிகள் உள்ளனவா? என்பதை கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.

மேலும் பொதுமக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகிய வற்றை உறுதி செய்திட வேண்டும். அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக போதிய மருத்துவக் குழுக்கள் அமைத்திட வேண்டும். அரசு மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். உலகளவில் பெருமை வாய்ந்த சித்திரை பெருவிழாவை மிகச்சிறப் புடன் நடத்திட அனைத்துத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புணர்ந்து பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர், மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி பொன்வசந்த், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மதுரை மாநகராட்சி ஆணை யாளர் சிம்ரன்ஜித் சிங், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) , வெங்க டேசன் (சோழவந் தான்) , பூமிநாதன் (மதுரை தெற்கு) ,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் சூரியகலா கலாநிதி , துணை மேயர் நாகராஜன், மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் , கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.