Police Department News

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மது விற்ற 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மது விற்ற 2 பேர் கைது

காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வல்லம் காலனி கிழக்கு தெரு பழனிவேல் (வயது 52) காட்டுக்கூடலூர் கலைஞர் தெருவை சேர்ந்த முருகவேல் (49), ஆகியோர் அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.