Police Department News

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே முதியவர் உள்பட 2 பேரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே முதியவர் உள்பட 2 பேரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை

கோவை வடவள்ளி ஐ.ஓ. காலனியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சம்பவத்தன்று 50 வயது ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் அடையாளம் தெரியாத ஆணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் சில மாதங்களாக மருதமலை அடிவார பகுதியில் யாசகம் செய்து பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்தது. அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்வீரம்பாளையத்தில் சம்பவத்தன்று 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.