Police Recruitment

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 300 லிட்டர் சாறாய ஊறல் பறிமுதல்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 300 லிட்டர் சாறாய ஊறல் பறிமுதல்.

அரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் எஸ். பட்டி கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் ஊறல் போலீசில் சிக்கியது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். சாராயம் தயாரிக்கும் போது அதில் போதையை அதிகப்படுத்துவதற்காக ஊமத்தங்காய் சாறையும் பாத்திரத்தில் அங்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊறலையும், ஊமத்தங்காய் சாறையும் போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பேரில் அந்த பகுதியை சேர்ந்த ரகுநாத் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.