Police Recruitment

பாலக்கோடு அருகே ஆடு முட்டியதில் மூதாட்டி சாவு

பாலக்கோடு அருகே ஆடு முட்டியதில் மூதாட்டி சாவு

பாலக்கோடு அருகே காவாப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நஞ்சப்பன். இவருடைய மனைவி மங்கம்மாள் (வயது.65) இவர் நேற்று காலை தான் வளர்க்கும் வெள்ளாட்டு கிடாவை வேறு இடத்தில் கட்டுவதற்காக ஆட்டின் கயிற்றை அவிழ்க்க சென்றார். அப்போது ஆடு மூதாட்டியின் வயிற்று மீது பலமாக முட்டியது. இதில் கீழே விழுந்த மங்கம்மாளின் பின்பக்க மண்டையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. உடனடி யாக குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காகதர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மங்கம் மாளை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.