Police Recruitment

ஆதரவற்ற முதியவரை குடும்பத்தினருடன் சேர்த்த மை தருமபுரி அமைப்பினர்

ஆதரவற்ற முதியவரை குடும்பத்தினருடன் சேர்த்த மை தருமபுரி அமைப்பினர்

மை தருமபுரி சமூக வலைதளங்கள் மூலம் தருமபுரி செம்மணஹள்ளி ஒட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் மாதப்பன் மூக்கப்ப கவுண்டர் இரண்டு வருடங்களாக ஆதரவின்றி சத்தியமங்கலம் பகுதியில் இருப்பதை பதிவு செய்தோம். இந்த பதிவை கண்டவுடன் அவரது உறவினர்கள் நம்மை தொடர்பு கொண்டு முதியவரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டனர். சத்தியமங்கலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜார்ஜ் அவர்களின் உதவியுடன் முதியவரை மீட்டு, தருமபுரி நகர காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் இளமதி அவர்கள் தலைமையில் முதியவரை அவரது உறவினர் எர்ரப்பட்டி மாணிக்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கு உறுதுணையாக இருந்த பாலச்சந்தர், சதீஸ் குமார் ராஜா, அருணாசலம் ஆகியோருக்கு உறவினர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.