Police Recruitment

மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் ‘கரோக்கி’ இன்னிசை

மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் ‘கரோக்கி’ இன்னிசை

மதுரையில் போக்கு வரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் கடந்த சில நாட்களாக இனிய அனுபவத்தை சந்தித்து வருகிறார்கள். சிக்னலில் காத்திருக்கும் போது காற்றில் மிதந்து வரும் கரோக்கி இன்னிசையால் வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
சிக்னல்களில் காத்தி ருக்கும் போது எரிச்சல் அடைபவர்கள் அதிகம் இதனால் அவர்கள் வாக னத்தில் வெறுப்புடன் காத்திருப்பார்கள். ஆனால் தற்போது சிக்னலில் காத்தி ருக்கும் போது இனிமையான இசை காதுகளில் தாலாட்டு வதால் எரிச்சல் அடை யாமல் காத்திருக்கின்றனர்.
மேலும் இடையிடையே இரு சக்கர வாகனம் இருவர் செல்வதற்காக மட்டுமே படியில் பயணம் நொடியில் மரணம் வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். ஹெல்மெட் அணிவது அவசியம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம் பெறுகின்றன. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து சிக்னலில் அதிக நேரம் காத்திருக்கும் கோரிப்பாளையம், காள வாசல், ஆரப்பாளையம், தெற்குவாசல், பெரியார் நிலையம், கீழவாசல் சிக்னல்களில் காத்திருப்பவர்கள் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதை பெரிதும் வரவேற்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி கூறியதாவது:-

சென்னை திருச்சி நகரங்களில் சிக்னல்களில் கரோக்கி இசையை ஒலி பரப்பும் நடைமுறைக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் ஆகி யோரின் முயற்சியில் கடந்த 28-ந்தேதி முதல் மதுரையில் செயல்பட்டு வருகிறது.
மதுரை மாநகரில் உள்ள 32 சிக்னல்களில் கரோக்கி இசை ஒலிபரப்பு செயல் பாட்டில் இருக்கிறது. போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் வழிகாட்டு தலில், போக்குவரத்து உதவி ஆணையர்கள் செல்வின் மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்தத் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
சிக்னலில் வாகனங்களில் காத்திருக்கும் போது வாகன ஓட்டிகளை அமைதியான மன நிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. வாகன ஓட்டிகளும் இதனை வரவேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.

Leave a Reply

Your email address will not be published.