Police Department News

பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம்! யார் அவர்?

பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம்! யார் அவர்?

ராஜபாளையம் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சஞ்சீவி நகர் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தெற்கு காவல் துறையினர் வந்து பார்த்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. சடலத்தின் அருகே பெட்ரோல் கொண்டு வந்த பிளாஸ்டிக் கேன் ஒன்றும் கிடந்துள்ளது.

சடலம் கிடந்த இடம் குடியிருப்பில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரம் என்பதால் அவர் சென்றதை யாரும் பார்க்கவில்லை என தெரிகிறது. இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் காவல்துறையிடம் விசாரணை நடத்தினர்.

இறந்தவர் யார் என்ற விபரம் உடனடியாக தெரியாததால் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இறந்தவர் குறித்து அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.