Police Department News

கீழே கிடந்த மதிப்புமிகு ஆவணங்களை உரியவரை தேடிக்கண்டுபிடித்து ஒப்படைத்த மாமனிதர்கள்

கீழே கிடந்த மதிப்புமிகு ஆவணங்களை உரியவரை தேடிக்கண்டுபிடித்து ஒப்படைத்த மாமனிதர்கள்

மதுரை பெத்தானியாபுரத்தில் வசித்து வருபவர் விவேகானந்தன் இவர் தர்ஷினி ஏஜென்ஸீஸ் என்ற கடன் பெற்றுத்தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்

இவர் அவசர நிமித்தமாக வெளியே செல்லும் சமயம் ஹவுசிங் லோன் சம்பந்தப்பட்ட மதிப்பு மிகு நில ஆவணங்களை தவறவிட்டு விட்டார் அவைகளை எங்கு தேடியும் கிடைக்க வில்லை இதனால் அவர் மிகுந்த மன உளச்சலில் இருந்து வந்தார் ஆனால் திடீரென அவருக்கு ஒரு போன்கால் எதிரில் பேசியவர் தன் பெயர் சேகர் என்றும் தான் மயில் முருகன் மொபைல் ஷாப் நடத்தி வருவதாகவும் கூறி தவற விட்ட ஆவணங்களை மதுரை சிங்கம்பிடாரி கோவில் தெரு தீக்கதிர் பத்திரிக்கை அலுவலகத்தின் அருகில் கிடந்ததாகவும் அதை பேன்ஸி ஸ்டோர் நடத்தும் ஜெயலெட்சுமி என்பவர் கண்டெடுத்து தன்னிடம் கொடுத்ததாகவும் கூறி அதை பெற்றுக்கொள்ள நேரில் வருமாறு கூறினார்

உடனே தவற விட்ட விவேகானந்தன் நேரில் சென்று பெற்றுக் கொண்டு அவர்களின் நேர்மையை பாராட்டி நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.