Police Department News

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்கத்தை

அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது இரண்டு ஆண் பயணிகளை சோதனை செய்த போது இருவரும் தங்கத்தை பேஸ்ட் வடிவில் உருக்கி தங்களுடைய உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதேபோல பெண் பயணி ஒருவர் சானிட்டரி நாப்கினில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், மூவரும் கடத்தி வந்த 1.4 கிலோ எடை கொண்ட ரூ.89.51 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த மூவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.