Police Department News

அலங்காநல்லூர் அருகே 1000 கட்டு வைக்கோல் தீயில் எறிந்து நாசம்

அலங்காநல்லூர் அருகே 1000 கட்டு வைக்கோல் தீயில் எறிந்து நாசம்

அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவர் ஏராளமான பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றின் உணவுக்காக சுமார் ஆயிரம் கட்டு வைக்கோலை கொள்முதல் செய்து வைத்திருந்தார் இந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் வைத்திருந்த வைகோலின் ஒரு பகுதியில் தீ பற்றியது பின்னர் அது வெகு வேகமாக பரவி திகுதிகுவென எரியத் தொடங்கியது.இது குறித்து உடனடியாக அலங்காநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அதற்கு முன்பாகவே வைக்கோல் கட்டுகள் அனைத்தும் தீயில் எறிந்து நாசமானது. இந்த தீ விபத்து எதிர்பாராமல் ஏற்பட்டதா? அல்லது வேண்டுமென்றே யாரேனும் தீ வைத்தார்களா? என போலீசார் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.