Police Department News

மாவட்ட அளவில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதல் பரிசு பெற்ற ராமநாதபுரம் போலீசார்

மாவட்ட அளவில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதல் பரிசு பெற்ற ராமநாதபுரம் போலீசார்.

சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 10.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை காவலர்கள் திரு.விக்னேஸ்வரன் PC 711, திரு.முத்தமிழன் PC 591, திரு.கார்த்திக் PC 574, திரு.ராஜபாண்டி PC 722, திரு.கபில்தேவ் PC 696 ஆகியோர் கலந்து கொண்டனர்.

12 கடலோர காவல் மாவட்டங்கள் கலந்துகொண்ட இப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவலர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் ஒட்டுமொத்த போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கமும் கோப்பையும் பெற்றார்.

பயிற்சி முடித்து வந்த காவலர்கள் நேற்று 04.03.2020 ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்களை சந்தித்து பாராட்டுகளை பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.