Police Department News

கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு.

கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு.

திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் (கா எண்349) புஷ்பா ஜங்ஷன் அருகில் உள்ள சிக்னலில் பணியில் இருக்கும்போது அவ்வழியாக வந்த கனரக வாகனம் ஒன்று நடந்து சென்ற பெண் ஒருவரை இடித்து காயம் ஏற்பட்டது.மேலும் அந்த காவலர் வாகனத்தை மடக்கி பிடித்து போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.அந்தப் பெண்ணுக்கு முதலுதவி மற்றும் 108 அவசர ஊர்தியை அழைத்து அப்பெண்ணை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். இச்செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.