Police Department News

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 1,300 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மூன்றாம் கட்டமாக யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 1,300 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மூன்றாம் கட்டமாக யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால்,இ.கா.ப அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் மன அழுத்தமின்றியும் மன மகிழ்வுடனும் பணிபுரிய யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பேராசிரியராக பணிபுரியும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் துணைவியார் Dr. Vaneeta Aggarwal அவர்கள் Ms. Nrithya Jagannathan, Director of Krishnamacharya Yoga Mandiram, Ms. Rinku Mecheri, President of FICCI FLO, யோகா பயிற்சியாளர் ஆண்டாள் ஆகியோருடன் இணைந்து காவல் துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக யோகா பயிற்சியினை இணையதளம் மூலமாக 19.09.2020 அன்று துவக்கி வைத்து, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்பேரில், இன்று (03.10.2020) சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு இணையதளம் வாயிலாக யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. 3ம் கட்டமாக இன்று வழங்கப்பட்ட யோகா மற்றும் மூச்சு பயிற்சியில் 1,300 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப்பயிற்சியின்போது முதுகு தண்டுவட வலி, இடுப்பு வலி, தொடர் தும்மல், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகள், இதய நோய், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, சிறுநீரக கல், சிறுநீரக தொற்று, கழுத்து வலி, ஒற்றைத் தலைவலி, தைராய்டு பிரச்சனை, தூக்கமின்மை, குடல் புண், அஜீரண கோளாறு, வாயுத் தொல்லை, மூலம், நரம்பு சம்மந்தமான பிரச்சனை, உடல் பருமன் மற்றும் பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் ஆகியவை சம்மந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டது. ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தனித்தனியாகவும் நன்கு புரியும் படியாகவும் பொறுமையாகவும் யோகா பயிற்சி மூலம் தீர்வு காண பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை Dr. Vaneeta Aggarwal, அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு எந்த நேரத்திலும் பணிபுரிய ஏதுவாகவும் இந்த யோகா பயிற்சியை பிரத்தியேகமாக ஏற்பாடு செய்துள்ளார்.
இன்றைய பயிற்சியில் நிறைவாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் திருமதி. H. ஜெயலட்சுமி, அவர்கள் இந்த பயிற்சியானது பங்குபெற்ற அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாக இருந்தது என்று நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.