Police Department News

மதுரை, பழங்கநத்தம் பகுதியில் வீட்டை உடைத்து 31 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை, பழங்கநத்தம் பகுதியில் வீட்டை உடைத்து 31 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் C2, குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பழங்காநத்தம், இந்த பகுதியில் வசித்து வருபவர் சண்முகம்விக்னேஷ், இவர் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே வந்து மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 31 சவரன் நகை மற்றும் 12 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வெளியே சென்ற சண்முகம்விக்னேஷ், திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு உடைத்திருப்பதை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது 31 சவரன் நகை மற்றும் பணம் 12 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

உடனே சுப்பிரமணியபுரம் C2, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு காவலர்களுடன் சென்று ஆய்வு செய்தார், மற்றும் தடயங்களை சேகரித்தார், மேற்கொண்டு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.