Police Department News

மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, நொண்டிகோவில்பபட்டியை சேர்ந்த போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு,

மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, நொண்டிகோவில்பபட்டியை சேர்ந்த போட்டோகிராபருக்கு அரிவாள் வெட்டு,

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா , நொண்டிகோவில்பட்டி, கம்பர் தெருவில் வசித்து வருபவர் கருப்பன் மகன் சேவுகமணி, வயது 29, இவரின் தந்தை கருப்பன் நகராட்சியில் துப்பரவு பணியாளராக இருந்து தற்போது இறந்து விட்டார். மேலும் இவர் மேலூர் பேங்க் ரோட்டில் உள்ள ரோஸ் போட்டோ ஸ்டுடியோவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார், இந்நிலையில் கடந்த 24 ம் தேதி மதியம் சுமார் 2.45 மணியளவில் இவர் ஸ்டுடியோவில் இருந்த போது, ஒத்தப்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் ராஜா, அண்ணா காலனியை சேர்ந்த கார்த்தி, இவர்கள் இருவரும், மற்றும் பார்வரடுபிளாக் அலுவலகத்தின் கீழ் கறிக் கடை வைத்திருக்கும் அம்ஜத், மற்றும் காதர் மொய்தீன் ஆகிய நால்வரும் சேர்ந்து ஸ்டுடியோவிற்குள் அத்து மீறி நுழைந்து கொலை செய்யும் நோக்கத்தோடு போட்டோகிராபர். சேவுகமணியை, ஜாதி பெயரை சொல்லி ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொண்டே அரிவாளால் தலையில் வெட்டினர், அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த நொண்டிக்கோவில்பட்டியை சேர்ந்த சந்திரன் மகன் மணிவண்ணன்,வயது 24/2020, மனோகரன் மகன் சண்முகப்பாண்டி வயது 21/2020, கருப்பன் மகன் கண்ணன் வயது 40/2020, ஆறுமுகம் மகன் சோலை வயது 24/2020, ஆகிய நால்வரும் ஓடி வந்தனர் உடனே அவர்களை பார்த்ததும் சேவுகமணியை வெட்டியவர்கள் ஓடி விட்டனர் அதன்பின் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு கூட்டி சென்று , அவசர சிகிச்சை மேற்கொண்டனர், அதன்பின் மருத்துவ அலுவலர்கள் மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கூறினர், நிலையத்தில் பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தகவல் அறிந்த உடன் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களுக்கு தகவல் அளித்து அவரின் அனுமதியுடன் அரசு மருத்துவ மனைக்கு சென்று, நடந்த சம்பவம் பற்றிய புகாரை போட்டோகிராப்பர் சேவுகமணியிம் பெற்றுக்கொண்டு, காவல் நிலையம் வந்து ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து, எதிரிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்து விசாரணை செய்யப்பட்டு அதன்பின் நீதி மன்றத்தில் அரிவாளால் வெட்டிய நால்வரையும் ஆஜர்படுத்தினர். அதன் பின் நீதி மன்றத்தின் உத்தரவின்படி நால்வரையும் சிறையில் அடைத்தனர்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி,மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.