Police Recruitment

தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைகழக மாணவிகள் காவல்துறைக்கு பாராட்டு

தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைகழக மாணவிகள் காவல்துறைக்கு பாராட்டு

கடந்த 23.12.2020-ம் தேதி மதுரை மாநகரில் 16 வயது பெண் குழந்தையை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களை உடனடியாக கைது செய்யும்படி மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) திரு.சிவபிரசாத் இ,கா, ப, அவர்களின் உத்தரவிட்டார்கள். அவர்கள் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு I/C ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.ஜஸ்டின் பிரபாகரன் அவர்களின் மேற்பார்வையில் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஹேமா மாலா அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பெண் குழந்தையை மீட்டு கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு குழந்தையை ஈடுபடுத்திய ஐந்து பெண்கள் உட்பட ஆறு நபர்கள் மீது
POCSO வழக்கு பதிவு செய்து 23.12.2020 ம் தேதி அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுபினர்.

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைகழகத்தில் பயிலும் ஆறு மாணவிகள் ஸ்வேதா, ஜெயந்தி, யோகலெட்சுமி, ஜனனி, ஆப்ரின் பாத்திமா ஆகியோர்கள் இன்று 26.12.2020- ம் தேதி மதுரை மாநகர காவல்துறையினரை மாநகர காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு பெண் குழந்தையை மீட்டு எதிரிகளை உடனடியாக கைது செய்தமைக்காக தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.