Police Recruitment

தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் தனிப்படை காவலர்களால் கைது..!!!

தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் தனிப்படை காவலர்களால் கைது..!!!

நாகப்பட்டினம் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட காரைக்காலை சேர்ந்த சேதுமணி(24),விவேக் (23) மற்றும் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த விஜய் (26) ஆகிய மூன்று வாலிபரை நாகப்பட்டினம் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 18 பவுன் நகை பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம், பைக் கொள்ளையர்கள் செயின் பறித்துச் சென்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வந்தன.இதனை அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா.இகாப அவர்கள் உத்தரவின்படி, துணை காவல் கண்காணிப்பாளர் திரு முருகவேலு அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு வெங்கடாசலம் தலைமையிலான தனிப்படையினர், கொள்ளையர்களை தேடி வந்தனர். நேற்று காலை, தனிப்படை போலீசார், புதிய பேருந்து நிலையம் பகுதி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பிக்கொண்டு வந்த வழியே செல்ல முயன்றனர்.

சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் நாகப்பட்டினம் வட்டாரத்தில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரியவந்தது. மேலும் கொரடாச்சேரியை சேர்ந்த இவர்களது நண்பன் ஆகிய மூவரும் வேலையின்றி சுற்றிய போது நண்பர்களாகி, தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அவர்களது வீட்டில் 18 பவுன் நகை மற்றும் செயின் பறிப்புக்கு பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூவரையும் கைது செய்து, நாகப்பட்டினம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.