Police Recruitment

வெளிமாநில சிறுமியை மீட்ட திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையம்

வெளிமாநில சிறுமியை மீட்ட திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையம்

மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா என்ற இடத்தில் இருந்து கடத்திவரப்பட்ட சிறுமியை மீட்டுஉரிய நபரிடம் ஒப்படைப்பு

மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா காவல் நிலைய வழக்கு எண் 128/2020 U/S 363 IPC வழக்கில் தேடப்பட்டு வரும் சிறுமி மற்றும் எதிரியை திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.கணேசன்,உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் இரண்டாம் நிலை காவலர் 765
திரு.சரவணகுமார், இரண்டாம் நிலைக்காவலர் 224
திரு.சத்தியேந்திரன் என்பவர்கள் மத்தியபிரதேச காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் உதவி கேட்டதன் பேரில் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்திமா நகர் சரண் தியேட்டர் அருகில் தங்கியிருந்த அந்த வழக்கின் சிறுமியை மீட்டும் வழக்கின் எதிரியை கைது செய்தும் மத்திய பிரதேசம் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர் வசம் ஒப்படைத்தனர்.இச்செயலை செய்த ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.