Police Department News

100சதவீத வாக்களிக்க வேண்டி கிராம மக்களிடம் ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளர் விமலா-வை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

100சதவீத வாக்களிக்க வேண்டி கிராம மக்களிடம் ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளர் விமலா-வை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விமலா இவர் பணிபுரிந்து வரும் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான வடக்குப்புதுர், இருமன்குளம், ஆனையூர், தெற்குபுதூர், நொச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த மாதம் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100சதவீத வாக்களிக்க வேண்டி கிராமம், கிராமமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகள் மற்றும் பிரச்சனைகளுக்கு உடனடியாக என்னை எந்த நேரமும் தொடர்புகொள்ளலாம் என அறிவித்து தன்னுடைய அலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளர். அதனால் காவல் உதவி ஆய்வாளர் விமலாவை அனைத்து தரப்பு மக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published.