காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் சிபி கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாணவியை சிபி கடத்திச் சென்று விட்டதாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் பின்னர் சிபியிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாணவி கடத்தல் வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் சிபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலக்கோடு காவல்ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிவு செய்தார் மேலும் சிபியை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
விருதுநகர்மாவட்டம்:- ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லையின் தாணிப்பாறை அருகாமையில் மதுவிலக்கு காவல் பிரிவில் பணியாற்றும் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உயர்திரு இமானுவேல் அவர்களின் உத்தரவுப்படி. திருமதி லட்சுமி பிரபா காவல் ஆய்வாளர் திரு கணேசன் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சேர்ந்து சோதனை நடத்தியதில் 4956 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேமானந்த சின்ஹா அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி மதுரை மாநகர ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள் உத்தரவின்படி மதுரை மாநகரில் உள்ள 22 காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி பொருத்தி அதன் மூலம் கொரோனா விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகள், மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளி இடங்களில் தேவையில்லாமல் சுற்றி திறிபவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைப்பது, சமூக இடைவெளியை கண்டிப்பாக […]
பாவூர் சத்திரம் அருகே புகையிலை பொருள் விற்ற இருவர் கைது தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.இந்தநிலையில் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை […]