காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் சிபி கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாணவியை சிபி கடத்திச் சென்று விட்டதாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் பின்னர் சிபியிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாணவி கடத்தல் வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் சிபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலக்கோடு காவல்ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிவு செய்தார் மேலும் சிபியை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
குட்கா விற்றவர் கைது . ஏரி பஞ்சப்பள்ளியில் குட்கா விற்ற பெண் கைது . தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து,பஞ்சப்பள்ளி போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஏரி பஞ்சப்பள்ளி கிராமத்தில் லட்சுமி (வயது. 55) என்பவரது பெட்டிகடையில் குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை கைது செய்த பஞ்சப்பள்ளி போலீசார் அவரிடமிருந்து 500 ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்தனர்.
மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம். மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி பொன்னி, IPS., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று மதுரை […]
திருடப்பட்ட 22 சிலைகள் மீட்டு¸ 4 பேரை கைது செய்த காவல்துறையினர் தஞ்சாவூர் மாவட்டம்¸ கரந்தையில் உள்ள ஆதிஸ்வர சுவாமி ஜெயின் கோவிலில் இருந்து 1 ஐம்பொன் சிலை உள்பட 22 சிலைகள் திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில்¸ உதவி ஆய்வாளர் திரு. சுகுமாரன் அவர்களின் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு¸ குற்றவாளிகளை தேடிவந்த நிலையில்¸ 07.03.2020ம் தேதியன்று சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து¸ அவர்களிடமிருந்து சிலைகள் கைப்பற்றப்பட்டது. சிறப்பாக பணியாற்றி சிலைகளை […]