கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி
30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00 மணிக்கு ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராம்கேவால்-அனிதா தம்பதியரின் 6 மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விட்டதாக ஓசூர் நகர காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாகூர் இ.கா.ப., அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தன் அவர்கள், திரு. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் மற்றும் ஓசூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து ஓசூர் நகரத்தின் அனைத்து கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை கடத்திச் சென்ற 3 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார். மேலும் குழந்தையை கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பாலக்கோட்டில் விதிமுறை மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்ற 5ஆட்டோக்கள் பறிமுதல் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்கின்றனர்.இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு தொடர்ந்து புகார்கள் வந்ததின் அடிப்படையில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் அவர்களின் உத்தரவுப்படி, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, பஸ் நிலையம், சர்க்கரைஆலை, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 27 நாட்களுக்குப்பின் குண்டடம் காவல்நிலைய பணிக்கு திரும்பிய காவல் ஆய்வாளருக்கு காவலர்கள் மாலை அணிவித்து வரவேற்று மரியாதை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் காவல் நிலைய ஆய்வாளராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு கொரோனா நோய்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். […]
மதுரை காவல் ஆணையரின் உத்தரவின்படி ஊரடங்கின் போது முதியவர்களை கண்காணித்து அவர்களுக்கு உதவும் போலீசார் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி முழு ஊரடங்கில் போலீசார் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர், நேற்று முன் தினம் தெப்பக்குளத்தை சேர்ந்த ராமதாஸ் என்ற முதியவர் ரயில்வே மருத்துவ மனைக்கு செல்ல உதவுமாறு அலைபேசியில் போலீசாரிடம் கேட்டார். உடனடியாக அவரது வீட்டிற்கு தெப்பக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் […]