கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி
30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00 மணிக்கு ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராம்கேவால்-அனிதா தம்பதியரின் 6 மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விட்டதாக ஓசூர் நகர காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாகூர் இ.கா.ப., அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தன் அவர்கள், திரு. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் மற்றும் ஓசூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து ஓசூர் நகரத்தின் அனைத்து கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை கடத்திச் சென்ற 3 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார். மேலும் குழந்தையை கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
செயின்பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, பல்லாவரம், எண்-19, என்ற முகவரியில் வசித்து வரும் பிரகாஷ், வ/32, த/பெ.மூர்த்தி என்பவர் கடந்த 09.10.2011 அன்று மதியம் சுமார் 1.00 மணியளவில் சென்ட்ரல் சப்வே உட்புறம் நடந்து சென்று கொண்டிருந்த போது, வியாசர்பாடி பகுதியைச்சேர்ந்த குமார் (எ) அருப்பு குமார் […]
ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன் கோவில் ஆடிவெள்ளி பொதுமக்களுக்கு மதுரை காவல்துறை பலத்த பாதுகாப்பு மாநகர்ஜெய்ஹிந்துபுரம்பகுதியில்உள்ள B-6 PS காவல்நிலையத்திற்கு உள்பட்ட பகுதி ஜெய்ஹிந்துபுரம் மெயின்வீதில்உள்ளஸ்ரீவீரமாகாளியம்மன்கோவில்ஆடிமாதம்இராண்டவதுவெள்ளிகிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.அந்த பகுதி ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம்,சார்பு ஆய்வாளர் திரு. கார்த்திக் அவர்கள் (மற்றும்)காவலர்,திரு. ராமசரவணன் அவர்கள் மற்றும் ரோந்துபணியில் உள்ள காவலர்கள்பாதுகாப்புபணியில்ஈடுபட்டு வந்தார்கள்.பொதுமக்கள்நீண்டவரிசையில் நின்று சென்றார்கள்,,
மாவட்ட அளவில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதல் பரிசு பெற்ற ராமநாதபுரம் போலீசார். சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 10.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை காவலர்கள் திரு.விக்னேஸ்வரன் PC 711, திரு.முத்தமிழன் PC 591, திரு.கார்த்திக் PC 574, திரு.ராஜபாண்டி PC 722, திரு.கபில்தேவ் PC 696 ஆகியோர் கலந்து கொண்டனர். 12 கடலோர காவல் மாவட்டங்கள் கலந்துகொண்ட […]