கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி
30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00 மணிக்கு ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராம்கேவால்-அனிதா தம்பதியரின் 6 மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விட்டதாக ஓசூர் நகர காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாகூர் இ.கா.ப., அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தன் அவர்கள், திரு. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் மற்றும் ஓசூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து ஓசூர் நகரத்தின் அனைத்து கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை கடத்திச் சென்ற 3 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார். மேலும் குழந்தையை கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
`37 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை!’ -சிறுமியைத் திருமணம் செய்து சிக்கிக் கொண்ட நாமக்கல் இளைஞர்ஜெயலட்சுமணனுக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால், பலரும் அவருக்குப் பெண் தர தயங்கியதாகச் சொல்லப்படுகிறது. 17 வயதே ஆன சிறுமியைத் திருமணம் செய்த பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் சிறுமியின் பெற்றோர்களை போலீஸார் கைது செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர், ஜெய லட்சுமணன் (வயது 37). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை […]
பாலக்கோடு அருகே குடும்ப பிரச்னையில் 2 குழந்தைகளுடன் தாய்கிணற்றில் விழுந்து தற்கொலை தர்மபுரி மாவட்டம்,மாரண்டஹள்ளி அடுத்த தொட்டபாவளி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன் இவரது மனைவி லட்சுமி (27)இவர்களுக்கு பிரசாந்த் (4) லதா (6மாதம் பெண் குழந்தை இருந்தனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.இதனால் மனமுடைந்த காணப்பட்ட லட்சுமி இன்று காலை தனது இரு குழந்தைகளுடன் அவர்களுடைய விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த […]
மதுரை மாநகரில் விதி மீறிய வாகனங்களின் மீது காவல் துறையினர் நடவடிக்கை மதுரை மாநர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனாந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகரில் வாகனங்களில் பதிவெண்களில் மாற்றம் செய்தல் சைலன்சர் மாற்றம் செய்தல் மற்றும் பம்பர் பொருத்துதல் போன்ற விதி மீறல்கள் மீது மதுரை மாநகர போக்குவாரத்து காவல் துறையினர் நடவாடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள். கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1870 வழக்குகள் பதிவெண்காளில் மாற்றம் செய்தல் 219 வழக்குகள் சைலன்சர் […]