Police Department News

இராணி பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ரோந்து மேற்கொண்டார்..

இராணி பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ரோந்து மேற்கொண்டார்.. 22.06.2025 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் ரோந்து பணியினை மேற்கொண்டார்

Police Department News

நேர்மை மிகு சிறுவர்கள், பாராட்டி பரிசு வழங்கிய காவல் ஆய்வாளர்

நேர்மை மிகு சிறுவர்கள், பாராட்டி பரிசு வழங்கிய காவல் ஆய்வாளர் கடையம் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு பயிலும் சிறுவர்களான தர்மர் என்பவரின் மகன் அபிமன்யு மற்றும் கருப்பசாமி என்பவரின் மகன் பாலாஜி ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே கிடந்த 100 ரூபாயை எடுத்து அதனை உடனடியாக கடையம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமல் சிறு வயதிலேயே நேர்மையாக செயல்பட்டு காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த சிறுவர்களை பாராட்டும் விதமாக அவர்கள் […]

Police Department News

சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர்களின் சிறப்பான பணிக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர்களின் சிறப்பான பணிக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவல் மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.செந்தில் வடிவு மற்றும் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு முதல்நிலைக் காவலர் மணிகண்டன் ஆகியோரின் தகுந்த புலன் மூலம் முன்தகவல் பெற்று நுண்ணறிவுப் பிரிவு உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து துரித நடவடிக்கை எடுத்தமைக்காக பாராட்டினார்.

Police Department News

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு கூட்டம்

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு கூட்டம் 20.06.2025 மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில், குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Police Department News

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் சர்வதேச யோகா தினம்

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் சர்வதேச யோகா தினம் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன்,IPS., அவர்கள் தலைமையில் காகுப்பம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்திரு.ஞானவேல், காவல் ஆய்வாளர் திரு.அருணாச்சலம், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்

Police Department News

அருப்புக்கோட்டை அருகே
குடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் அரிவாளாள் வெட்டி படுகொலை.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை அருகேகுடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் அரிவாளாள் வெட்டி படுகொலை. அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் அவரது மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற கணவர். இறந்த பெண் மல்லாங்கிணர் அருகே நந்திக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண்,அவருடன் சேர்த்து மகள்களான ஜெயலட்சுமி, ஜெயதுர்காஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவரும் வெட்டி கொன்றுவிட்டு அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து விட்டார் அவரது பெயர் சுந்தரவேலு எனவும் […]

Police Department News

மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 19.06.2025 அன்று மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் Anti Drug Club மன்றத்தின் […]

Police Department News

சிறப்பாக பணிபுரிந்த தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணிபுரிந்த தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான சட்டம் சார்ந்த முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் உதவி அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பங்கேற்று, குற்றவியல் வழக்குகளின் நடத்தை, குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைகளை தவிர்க்கும் வழிகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் […]

Police Department News

தென்காசி மாவட்டம் சிவகிரியில் திருமண வீட்டில் இருவரை வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை

தென்காசி மாவட்டம் சிவகிரியில் திருமண வீட்டில் இருவரை வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை 15.09.2017 ஆண்டுதிருமண வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கண்ணன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை வழக்கின் எதிரி பால் கண்ணன் என்பவர் வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்திய வழக்கு சிவகிரி காவல் நிலையத்தில் குற்ற எண் 245/17,ன்படி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கு சங்கரன் கோயில் சார்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது இந்த நிலையில் நீதிபதி திரு மகேந்திரவர்மா […]

Police Department News

குற்ற வழக்கு திறமையாக செயல்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு

குற்ற வழக்கு திறமையாக செயல்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு சென்னை எழும்பூர் காவல் நிலைய ஆதாய கொலை வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கையில் சிறப்பு கவனம் செலுத்தி, 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த திரு.A.கருணாகரன், காவல் ஆய்வாளர், நுங்கம்பாக்கம் அவர்களை சென்னை […]