Police Recruitment

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு 09.02.2026 அன்று மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Police Recruitment

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம். 09.02.2026 அன்று எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ . லோகநாதன் இ.கா.ப.,அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணைஆணையர் (தெற்கு), காவல் துணைஆணையர் (வடக்கு) மற்றும் காவல் துணைஆணையர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.