Police Department News

மதுரை, சமயநல்லூரில் கர்பிணி போல் வேடமணிந்து கஞ்சா விற்ற இளம் பெண்கள் இருவர் கைது.

மதுரை, சமயநல்லூரில் கர்பிணி போல் வேடமணிந்து கஞ்சா விற்ற இளம் பெண்கள் இருவர் கைது.

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவ்வழியாக இரு கர்பிணி பெண்கள் பர்தா அணிந்தபடி அடிக்கடி அங்கும் இங்கும் சுற்றியபடி திரிந்தனர்.

இதனை பார்த்த போலீசார் அவ்விரு பெண்களை கண்காணித்த இரு பெண்களும் கர்பிணி போல வேடமிட்டு வயிற்றில் கஞ்சாவை பதுக்கி வைத்து அப்பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த சமயநல்லூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது, நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த ராணி, மற்றும் தமிழ்செல்வி என்பதும் இருவருக்கும் கள்ளக்காதலனான மதுரை தத்தனெரியை சேர்ந்த செல்வம் என்பவருக்காக கஞ்சாவை விற்று செலவழித்து வந்ததாகவும் கள்ளக்காதலனான செல்வம்தான் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்ய தருவதாகவும் தாங்கள் கஞ்சாவை விற்று குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கஞ்சா விற்று வருவதாக கூறினர்.

இதனால் இரு பெண்களின் கள்க்காதலன் செல்வம் மற்றும் இரு காதலிகளையும் சமயநல்லூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைதகதனர்.

Leave a Reply

Your email address will not be published.