Police Recruitment

காஞ்சிபுரம் சரகத்தில் விதிகளை மீறிய 2,014 வாகனங்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் சரகத்தில் விதிகளை மீறிய 2,014 வாகனங்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் காவல் சரகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 2, 014 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி பா.சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமுடக்க உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞா்கள் மற்றும் அத்தியாவசிய தேவையில்லாமல் சுற்றித்திரிவோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது

அவ்வகையில் கடந்த 15-ம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 618 வாகனங்களும் , செங்கல்பட்டு மாவட்டத்தில் 742 வாகனங்களும் , திருவள்ளூா் மாவட்டத்தில் 654 வாகனங்களும் என காஞ்சிபுரம் சரகத்தில்
2,014 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக 2, 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றுதெரிவித்துள்ளார்
சரக டி. ஐ. ஜி
முனைவர் சாமுண்டீஸ்வரி

Leave a Reply

Your email address will not be published.