Police Department News

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது வகையில் அவரவர் பங்கிற்கு முடிந்தவரை எளியவர்களுக்கு உதவி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம்:-

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது வகையில் அவரவர் பங்கிற்கு முடிந்தவரை எளியவர்களுக்கு உதவி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரும் தம் பங்கிற்கு பல உதவிகள் செய்து வருகிறார்கள்.

அருப்புக்கோட்டை நகர் குற்ற பிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பா அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த வயதான மூதாட்டி முககவசம் இல்லாமல் சென்றதை பார்த்து அவருக்கு முககவசம் கொடுத்து இம்மாதிரியான கொரோனா தொற்று காலத்தில் வெளியே வருவதை தவிர்க்கவும் என்று எடுத்துக்கூறி அனுப்பி வைத்தார்.

இரு சக்கரவாகனத்தில் சென்ற குடும்பத்தினர் அவர்களுடன் சென்ற குழந்தைக்கு முககவசம் அணியவில்லை பெற்றோர் மட்டுமே முககவசம் அணிந்திருந்தனர்.

கொரோனா காலகட்டத்தில் குழந்தையுடன் செல்லக்கூடாது அதுவும் குழந்தைக்கு முககவசம் அணியவில்லை என்பதை பார்த்து அக்குழந்தைக்கு ஆய்வாளர் முககவசம் அணிவித்தார் மேலும் குழந்தையின் பெற்றோருக்கு சில அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.