Police Department News

விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை வட்டாட்சியர் வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வட்டாச்சியர் வாகனத்தை ஒட்டி வந்த கிராம உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம்:-

விருதுநகர் அருகே
அருப்புக்கோட்டை வட்டாட்சியர் வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வட்டாச்சியர் வாகனத்தை ஒட்டி வந்த கிராம உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன் விருதுநகரில் வசிக்கும் ரவிச்சந்திரன் தினமும் அருப்புக்கோட்டைக்கு அரசு வாகனத்தில்(பொலிரோ) வந்து செல்வது வழக்கம்.

இன்னிலையில் அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இரவு வரை ரோந்து
பணிகளை முடித்துவிட்டு அரசு வாகனத்தில் ரவிச்சந்திரன் விருதுநகர் சென்றார் வட்டாச்சியர் சென்ற வாகனத்தை
சின்ன புளியம்பட்டி கிராம உதவியாளரும் மாற்று ஓட்டுநருமான சுகுமாரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

அவருடன் மருது பாண்டியன் என்ற மற்றொரு ஓட்டுநரும் பயணித்துள்ளார் இந்நிலையில் வட்டாச்சியர் ரவிச்சந்திரனை வீட்டில் இறக்கிவிட்டு மீண்டும் அருப்புக்கோட்டைக்கு திரும்பியபோது பெரிய வள்ளிகுளம் அருகே திடீரென வட்டாச்சியர் வாகனம் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் வட்டாட்சியரின் வாகனம் லாரியின் அடியில் சிக்கி கிராம உதவியாளர் சுகுமாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் உடன் வந்த மருதுபாண்டியன் படுகாயமடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வாகனத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மருதுபாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த கிராம உதவியாளர் சுகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தாலுகா போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.