Police Department News

இறந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த உதவிய போலீசார்

இறந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த உதவிய போலீசார்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள எலந்தக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் வயது 70, இவருடைய மனைவி அமுதா வயது 65, இவர்கள் கூலி வேலை செய்து வந்தனர். லாரி டிலைவரான இவரது மகன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார் இதனால் கணவன் மனைவி இருவரும் தனியாக குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் உடல் நலக் குறைவால் இறந்து விட்டார் அவரை அடக்கம் செய்ய வழியில்லாமல் அவரது மனைவி அமுதா மிகவும் தடுமாறினார். கூலி வேலை செய்து வந்த அவர்கள் சாப்பாட்டுக்கு கூட வழிரில்லாமல் இருந்து வநகதனர் இந்த நிலையில் அவரது மனைவி அமுதா அவர்கள் வெப்படை காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளர் வெற்றிவேலிடம் விபரத்தை கூறி தன்னுடைய கணவரின் உடலை நல்லடக்கம் செய்ய உதவும்படி கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து சார்பு ஆய்வாளர் வெற்றிவேல் தலைமை காவலர் மாணிக்கம் ஆகியோர் உறவினர்களின் உதவியுடன் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்தனர். இதனால் அமுதா அவர்கள் கண்ணீர்மல்க போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.