Police Department News

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், போலீசாருக்கு நாட்குறிப்பு எழுதுதல் குறித்த பயிற்சி

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், போலீசாருக்கு நாட்குறிப்பு எழுதுதல் குறித்த பயிற்சி

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்ட காவல்துறையில் முதல் நிலை காவலர் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவலர்களில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு காவல் நிலையத்தின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றான வழக்கு நாட்குறிப்பு எழுதுதல் பற்றிய 3 நாட்கள் சிறப்பு பயிற்ச்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 25 காவலர்களுக்கு வழக்கு நாட்குறிப்பு எழுதும் பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பாஸ்கர் அவர்கள் தொடங்கி வைத்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்ரண்டுகள் ரமேஸ்பாபு, ராஜேஸ்வரி, உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.