Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் போஸ்டர் முத்துச்சாமி அவர்களின் தந்தை தவறி விழுந்து மரணம்

மதுரை, செல்லூர் பகுதியில் போஸ்டர் முத்துச்சாமி அவர்களின் தந்தை தவறி விழுந்து மரணம்

மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் அஹிம்சாபுரம் 5 வது தெரு விசாலத்தில் வசித்து வருபவர் பெருமாள் மகன் முத்துச்சாமி வயது 51/21, இவர் தன் மனைவி மல்லிகா, மற்றும் இரண்டு மகள்கள் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார், இவர் விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் பணி செய்து வருகிறார், இவரது தந்தை பெருமாள், தாய் மீனாட்சி ஆகியோர் இவரது வீட்டிற்கு பின்புரம்மாக உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1 ம் தேதியன்று இவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அருள்பிரகாஷம் அவர்கள் முத்துச்சாமியிடம் வந்து உங்கள் தந்தை தன் வீட்டிற்கு பக்கத்தில் கழிவரை பக்கத்தில் மயங்கி கிடப்பதாக தகவல் கூற, உடனே இவர் சென்று தனது தந்தையை ஒரு போக்கு ஆட்டோவில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று அவர் தலையில் உள்ள காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அரசு மருத்து மனைக்கு அழைத்து சென்றனர், அங்கு அவருக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார், உடனே செல்லூர் காவல் நிலையத்தில் முத்துச்சாமி அவர்கள் நடந்த சம்பவத்தை கூறி தங்களின் குலவழக்கப்படி தன் தந்தையின் உடலை நல்லடக்கம் செய்ய உதவும் வகையில் சட்டப்படியான விசாரணை செய்து உடலை பெற்றுத்தரும்படி புகார் மனு அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட நிலைய சார்பு ஆய்வாளர் திரு ஜான் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.